புதிய சீரியலில் இணையும் ரேஷ்மா வரவேற்கும் ரசிகர்கள்.

thumb_upLike
commentComments
shareShare

புதிய சீரியலில் இணையும் ரேஷ்மா வரவேற்கும் ரசிகர்கள்.

பூவே பூச்சூடவா சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகி துறுதுறுப்பான நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்துள்ள நடிகை ரேஷ்மா முரளிதரன் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் தொடரின் முக்கிய கதாநாயகி.

கேரளாவில் பிறந்து பெங்களூரில் வளர்ந்த நடிகை ரேஷ்மா பெற்றோர்களின் ஆசைக்காக கல்லூரி படிப்பை முடித்து பிறகு தனது கனவு பாதையை நோக்கி நகர்ந்தார்.மாடலிங்க் துறையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.

பின் 2016இல் பேஷன் ஷோவில் இரண்டாவது ரன்னர் அப் ஆக இடம்பிடித்தார்.ரேஷ்மா ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடன திறமையை வெளிப்படுத்தினார்.அதுவே அவருக்கு நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தன.அதன் பிறகு பூவே பூச்சூடவா,அபி டைலர் மற்றும் கிழக்கு வாசல் என நடித்து வாய்ப்பை தக்க வைத்து கொண்டார்.

சமீபத்தில் ரேஷ்மா சீரியலை விட்டு விலகி தற்போது ஜீ தமிழில் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலில் இணைந்துள்ளார்.சிறிய இடைவேளைக்கு பிறகு ரேஷ்மாவை மீண்டும் சந்தித்ததில் அவர்கள் ரசிகர்களுக்கு பேரானந்தம்.

AvalGlitz in Social Media
Share to your pages!
Close